ரசிகர்கள் அதிர்ச்சி..! செவி திறன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரபல பாடகி அறிவிப்பு..!

பிரபல பாலிவுட் பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக், அரிதான உணர்ச்சி நரம்பு நரம்பு செவிப்புலன் இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
58 வயதான பாடகி அல்கா யாக்னிக், திங்கள்கிழமை இரவு வெளியிட்ட ஒரு இதயப்பூர்வமான சமூக ஊடக இடுகையின் மூலம் தனது நிலையை வெளிப்படுத்தினார்.
இது "திடீர் பெரும் பின்னடைவு" என்று அவர் தனது நிலையை விவரித்துள்ளார்.
இந்த உடல்நலப் பிரச்சினையே தான் சமீபத்தில் பொது வாழ்வில் இருந்து விலகியதற்குக் காரணம் என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
அல்கா யாக்னிக், நான்கு தசாப்த கால வாழ்க்கையில், 25க்கும் மேற்பட்ட மொழிகளில் இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில், அல்கா யாக்னிக் தனது அனுபவத்தை விவரித்தார்.
"சில வாரங்களுக்கு முன்பு, நான் ஒரு விமானத்தில் இருந்து வெளியேறும்போது, திடீரென்று என்னால் எதுவும் கேட்க முடியவில்லை என்று உணர்ந்தேன்."
பாதிப்பிலிருந்து மீள தனக்காக பிரார்த்தனை செய்யும்படியும், அதிக ஒலியுடன் இசை கேட்பது, ஹெட்போன் உபயோகிப்பதிலும் கவனமாக இருக்கும்படியும் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழில் ஜி.வி.பிரகாஷ் இசையில் ஓரம் போ படத்தில் இது என்ன மாயம் பாடல் பாடினார். கடைசியாக ரஹ்மான் இசையில் சம்கீலா படத்தில் நரம் காலிஜா பாடலைப் பாடியிருந்தார்.
