1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் அதிர்ச்சி..! நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹர்திக் விளையாட மாட்டார்..!

1

இந்திய அணி தனது நான்காவது ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து புனேயில் உள்ள மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க (எம்சிஏ) மைதானத்தில் விளையாடியது. இந்த போட்டியில் 9வது ஓவரை வீசினார் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா. இந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் லிட்டன் தாஸ் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். 3வது பந்தை வீசும்போது எதிர்பாராத விதமாக காலில் காயம் ஏற்பட வலியில் சுருண்டு மைதானத்தில் விழுந்தார். அணியின் பிசியோ உடனடியாக ஓடி வந்து அவரை சோதித்து பார்த்தார். இதன்பின் பாண்டியாவால் தொடர்ந்து பந்துவீச முடியவில்லை. இதையடுத்து அவர் ஆட்டத்தில் வெளியேறினார்.

பாண்டியாவுக்கு பதிலாக மீதமுள்ள பந்துகளை விராட் கோலி வீசினார். இதனிடையே, பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் அடைந்திருப்பதாகவும், அவருக்கு ஸ்கேன் எடுக்கப்படுகிறது என்றும் பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில் வரும் 22-ந் தேதி தரம்சாலாவில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like