கொரோனா தொற்றால் பிரபல பாடகர் மரணம்!!

கொரோனா தொற்றால் பிரபல பாடகர் மரணம்!!

கொரோனா தொற்றால் பிரபல பாடகர் மரணம்!!
X

பிரபல மலையாள பத்தி பாடகரான ஆலப்பி ரங்கநாத் கொரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 73.

இவர் 1949ஆம் ஆண்டு ஆலப்புழாவில் பிறந்தவர். இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், இளம் வயதிலிருந்தே இசையின் மீது தணியாத ஆர்வத்தில் முறையாக இசையைக் கற்றவர். பரத நாட்டியமும் கற்றுள்ளார்.

மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஆலப்பி ரங்கநாத் தமிழ் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

சபரிமலை ஐயப்பனைப் போற்றி, மலையாளத்திலும் தமிழிலும் ஏராளமான பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார். ஏராளமான பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார்.

Alleppey_ranganath

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு கோட்டயம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆலப்பி ரங்கநாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் இந்த ஆண்டிற்கான சபரிமலையின் "ஹரிவராசனம்" விருது பெற்றவர். ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு பூஜை தினத்தன்று சபரிமலையில் நடந்த விழாவில் ஹரிவராசனம் விருதும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it