1. Home
  2. தமிழ்நாடு

பிரபல இன்ஸ்டா பிரபலம் இலக்கியா கவலைக்கிடம்..! ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மீது பகீர் குற்றச்சாட்டு..!

1

டிக்டாக் மூலம் பிரபலமானவர் இலக்கியா. இவருக்கு சமூகவலைதளங்களில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்துவரும் இவர் அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருப்பதை கண்டறிந்தனர். இதனால் அவருக்கு போதையாகி உள்ளது.

உடனடியாக அவரை மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவெடுத்துள்ளனர். ஆனால், அவரது நண்பர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் சூப்பர் சுப்பராயன் மகன் திலீப் சுப்பராயன் மீது இன்ஸ்டாகிராம் பிரபலம் இலக்கியா அவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதனை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஷேரும் செய்துள்ளார்.

அதில் அவர் " "என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் மட்டும் தான் காரணம். என்னை நம்ப வச்சு ஏமாத்திட்டான். 6 வருஷமா அவன்கூட இருந்திருக்கேன். நிறைய பொண்ணுங்க கூட பழக்கம், அதைக்கேட்ட என்னை போட்டு அடிக்குறான். நானும் பொறுத்து பொறுத்து... என்னால முடியல. இதுவுமே நான் போட்டா என்னை அடி அடினு அடிப்பான் என தன் இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். அந்த ஸ்டோரியில் திலீப் சுப்பராயனின் போட்டோவையும் பதிவிட்டிருக்கிறார்". இந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட் வைரலாகி வருகிறது.

1

Trending News

Latest News

You May Like