1. Home
  2. தமிழ்நாடு

போதைப் பொருள் தடுப்பு போலீஸாரின் விசாரணை வளையத்தில் பிரபல நடிகை!

போதைப் பொருள் தடுப்பு போலீஸாரின் விசாரணை வளையத்தில் பிரபல நடிகை!


மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை கங்கனா ரனாவத் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல இருப்பதாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் கூறியதை அடுத்து, அவருக்கும் மகாராஷ்டிரா அரசுக்கும்  வார்த்தைப் போர் வெடித்தது.

அதனையடுத்து மும்பை பாந்த்ராவில் உள்ள கங்கனாவின் கட்டடம் மாநகராட்சி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக சொல்லி சிவசேனா அரசு இடித்தது.  இந்நிலையில் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை கங்கனா ரனாவத் கொண்டுவரப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

கங்கனா ரனாவத்தின் நண்பர் ஆத்யாயன் சுமன் கங்கனா போதைபொருட்களை பயன்படுத்துவார் என்றும், தன்னையும் அவர் வற்புறுத்தியுள்ளதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் போலீசார் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்களை நான் பயன்படுத்தி உள்ளேனா என்பதை அறிய மருத்துவ சோதனை நடத்துங்கள், குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான் மும்பையை விட்டே செல்ல தயார் என நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like