1. Home
  2. தமிழ்நாடு

மூன்றாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை..!

Q

கடந்த 2013-ம் ஆண்டு உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மீரா வாசுதேவன். முதல் படத்திலேயே மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார் மீரா. இதைத் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் கத்தி கப்பல், ஜெர்ரி, ஆட்ட நாயகன், குமரிப்பெண்ணின் உள்ளத்திலே, அடங்க மறு ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். தமிழ் தவிர மலையாளத்திலும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார்

இவர் கடந்த 2005-ம் ஆண்டு பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் முடிந்து ஒரு சில ஆண்டுகளிலேயே விகாரத்து பெற்று பிரிந்து சென்றார். இதைத் தொடர்ந்து மலையாள நடிகர் ஜான் கொகைனை திருமணம் செய்தார். அவரையும் விவாகரத்து செய்தார்.

இந்நிலையில், நடிகை மீரா வாசுதேவன், விபின் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமணப் புகைப்படங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 


 

Trending News

Latest News

You May Like