1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

பிரபல நடிகர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!


உடல் நலக்குறைவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும், அரசியல்வாதியுமான கார்த்திக் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

1980களில் ரசிகர்களின் குறிப்பாக பெண் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நவரச நாயகன் கார்த்திக். சினிமாவை தொடர்ந்து இவர் அரசியலிலும் ஈடுபட தொடங்கினார்.

முதலில் பார்வர்ட் பிளாக் கட்சி நடத்திவந்த அவர் கடந்த 2018ஆம் ஆண்டு அந்த கட்சியை கலைத்துவிட்டு மனித உரிமை காக்கும் கட்சி என்ற புதியதொரு கட்சியை தொடங்கினார்.

இனி தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் அவர் கட்சி தொடங்கிய போது தெரிவித்தார். ஆனால் நடந்த முடிந்த தேர்தலில் அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்தார்.

இந்நிலையில் மார்ச் 21ஆம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர், பின்னர் அ.தி.மு.., கூட்டணிக்கு ஆதரவாக, மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் பிரசாரம் செய்தார்.

பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு கடந்த 5ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனால் அடையாறு மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 2ஆவது முறையாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் முடிவு நெகட்டிவ் என வந்தது.

ஆனாலும் மூச்சுத்திணறல் தொடர்ந்து இருப்பதால் நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like