1. Home
  2. தமிழ்நாடு

குடும்ப பிரச்னை… குழந்தைகளை எரித்துவிட்டு தாயும் தற்கொலை!

குடும்ப பிரச்னை… குழந்தைகளை எரித்துவிட்டு தாயும் தற்கொலை!


கணவனுடன் தொடர்ந்து ஏற்பட்டு வந்த பிரச்னை காரணமாக பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தீவைத்து எரித்துவிட்டு தானும் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேல்வாசல் பகுதியில் தமிழ் செல்வி என்ற பெண் தனது கணவர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். தம்பதியர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அதேபோன்று நேற்றும் கணவர் மனைவியுடன் தகறாரில் ஈடுபட்டுள்ளார். இதனால் வேதனை அடைந்த தமிழ் செல்வி தனது 2 பெண் குழந்தைகளின் உடலுக்கு தீவைத்துள்ளார்.

குடும்ப பிரச்னை… குழந்தைகளை எரித்துவிட்டு தாயும் தற்கொலை!

மேலும் தன் உடலிலும் தீ வைத்துக் கொண்டார். அவர்களின் அலறல் சத்தம்கேட்டு சென்றுபார்த்த உறவினர்கள் மூன்றுபேரும் தீயில் எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை காப்பாற முயன்றப்போதும் குழந்தைகள் வரணஸ், வர்ணிகா ஸ்ரீ ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தமிழ் செல்வியை காயத்துடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like