குடும்ப பிரச்னை… மனைவி தீக்குளித்ததால் பரபரப்பு!

ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே குடும்ப பிரச்னை காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதுகுளத்தூர் அடுத்த வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவர் மதுவுக்கு அடிமையானவர். இவர் வேலைக்கு செல்லாமல் தினமும் தனது மனைவி பாகம்பிரியாள் உடன் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனால் அவரது மனைவி பெரும் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவரது கணவர் குடித்துவிட்டு சண்டை போடவே, பாகம்பிரியாள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடலில் தீக்காயம் 60% இருந்ததால் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதுகுளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in