1. Home
  2. தமிழ்நாடு

கள்ளக்காதலை மோப்பம் பிடித்த கணவன்… கூலிப்படையை ஏவி முடித்துவிட்ட மனைவி!

கள்ளக்காதலை மோப்பம் பிடித்த கணவன்… கூலிப்படையை ஏவி முடித்துவிட்ட மனைவி!


தன்னுடைய கள்ளக்காதல் விவகாரம் கணவனுக்கு தெரியவந்ததை அடுத்து, மனைவியே கூலிப்படையை வைத்து அவரை போட்டுத்தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத் அருகே மானேக்பாக் பகுதியைச் சேர்ந்த பிரமோத் (43) மூன்றாவது மனைவியாக கிஞ்சல் (23) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கும், அம்ரத் என்ற இளவயது நபருக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அவர்களின் கள்ளக்காதல் குறித்து ஒரு நாள் பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. ஒரு நாள் இந்த பிரச்னை பூதாகரமாகும் என அஞ்சிய அந்தப் பெண் கள்ளக்காதலன் உதவியுடன் தனது கணவனை தீர்த்துக் கட்டி முடிவு செய்தார். அதன்படி, கூலிப்படைக்கு 5 லட்ச ரூபாய் கொடுத்து பிரமோத்தை தீர்த்துக் கட்ட இருவரும் சொன்னார்கள்.

கடந்த மாதம் 31ஆம் தேதியன்று பிரமோத் அலுவலகத்தில் இருந்து கிளம்பியதும் அவரது மனைவி கூலிப்படைக்கு தகவல் அளித்தார். எனவே பிரமோத்தை பின்தொடர்ந்து வந்த கூலிப்படை அவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

பின்னர் அவரது மனைவி உறவினர்களுக்கு போன் செய்து தன்னுடைய கணவனை காணவில்லை என்று கூறினார். மேலும் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்ட காவல்துறைக்கு பிரமோத்தின் மனைவி மீது சந்தேகம் எழுந்தது.

தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார் பிரமோத்தின் மனைவி கிஞ்சல் தான் அவரை கூலிப்படையை வைத்து கொலை செய்தார் என்பதை கண்டறிந்தனர். இதனிடையே அவர் தன் கள்ளக்காதலனுடன் தலைமறைவானதை அடுத்து, இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like