1. Home
  2. தமிழ்நாடு

இணையத்தில் உலா வரும் போலி பேமெண்ட் அப்ளிகேஷன்... எச்சரிக்கையாக இருப்பது எப்படி?

1

Google Pay, Paytm மற்றும் PhonePe போன்ற UPI அப்ளிகேஷன்கள் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதே சமயத்தில் நாம் சற்று எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். பிரபலமான UPI அப்ளிகேஷன்களை போலவே இருக்கும் போலியான அப்ளிகேஷன்களை உருவாக்கி, மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இந்த அப்ளிகேஷன்களை பயன்படுத்தி செய்யப்படும் பேமெண்ட்கள் உண்மையில் மோசடிக்காரர்களுக்கு சென்று சேருகின்றது.

போலியான பேமெண்ட் அப்ளிகேஷன்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி? மக்களை போலியான பேமெண்ட் அப்ளிகேஷன்களை பயன்படுத்த வைத்து அதன் மூலமாக தங்களுடைய டிரான்சாக்ஷன் நிறைவு செய்துவிட்டது போல அவர்களை மோசடிக்காரர்கள் ஏமாற்றுகின்றனர். ஆனால் உண்மையில் எந்த ஒரு பணமும் அங்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு இருக்காது. எனவே இந்த மாதிரியான மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு பின்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவலாம்.

*எப்பொழுதும் அதிகாரப்பூர்வ பேமெண்ட் அப்ளிகேஷன் அல்லது பேங்க் அக்கவுண்ட் பயன்படுத்தி பேமெண்ட்களை செய்யவும். ஸ்கிரீன்ஷாட்கள் அல்லது நோட்டிஃபிகேஷன்களை ஒருபோதும் நம்ப வேண்டாம்.

*டிரான்ஸாக்ஷன் விவரங்களில் சிறிய அளவிலான பிழைகள் அல்லது ஏற்ற இறக்கங்கள் இருந்தால் கூட அது போலியான அப்ளிகேஷன் ஆக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

*உங்களுடைய பகுதியில் பொதுவாக பயன்படுத்தப்படும் UPI அப்ளிகேஷன்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். தெரியாத ஒரு அப்ளிகேஷனை யாராவது பயன்படுத்த சொல்லி கேட்டால் எச்சரிக்கையாக இருக்கவும்.

பெரும்பாலும் இந்த மாதிரியான போலி பேமெண்ட் அப்ளிகேஷன்கள் கடைக்காரர்களை குறி வைத்து மோசடிக்காரர்கள் பயன்படுத்துகின்றனர். எப்பொழுதும் பிஸியாக இருக்கும் கடைகள் போன்றவற்றை குறி வைத்து இந்த மாதிரியான அப்ளிகேஷன்களை அங்கு பயன்படுத்த வைத்து விடுகின்றனர். இதன் விளைவாக கடைக்காரர்கள் பொருளையோ அல்லது சேவைகளையோ வழங்கிவிட்டு உண்மையில் எந்த ஒரு பேமெண்டையும் பெற மாட்டார்கள்.

எனவே ஒருவேளை நீங்கள் ஒரு கடைக்காரராக இருந்தால் இந்த மாதிரியான மோசடி குறித்தும், போலியான டிரான்ஸாக்ஷன்களை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்தும் உங்கள் கடையில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் தெரிந்து வைத்துக் கொள்ள பயிற்சி கொடுங்கள். பொருளையோ அல்லது சேவைகளையோ வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கு முன்பு பேமெண்டை ஒரு முறை சரிபார்க்கவும். ஏதேனும் சந்தேகத்திற்குரிய அல்லது போலியான பேமெண்ட் அப்ளிகேஷனை கண்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும். எனவே எப்போதும் உஷாராக இருந்தால் மோசடிக்காரர்களிடம் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like