1. Home
  2. தமிழ்நாடு

மருத்துவரை மிரட்டி , பண வசூல் செய்த போலி பத்திரிகையாளர்கள் !! 4 பேர் சிறையில் அடைப்பு..

மருத்துவரை மிரட்டி , பண வசூல் செய்த போலி பத்திரிகையாளர்கள் !! 4 பேர் சிறையில் அடைப்பு..


வேலூர் மாவட்டம்,காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த சித்த மருத்துவர் விஜயலட்சுமி ( வயது 40). இவர் அப்பகுதியில் சித்த வைத்தியம் பார்த்து வருகிறார். மேலும் நீரிழிவு உள்ள நோயாளிகள் தங்களுக்கு இன்சூலின் ஊசியை போட வேண்டுமென்றால் நீரிழிவு நோயாளிகள் மருந்துகளை வாங்கி வந்து அவர்களாகவே ஊசி போட்டு செல்வது வழக்கம்.

மருத்துவரை மிரட்டி , பண வசூல் செய்த போலி பத்திரிகையாளர்கள் !! 4 பேர் சிறையில் அடைப்பு..

இதனை அறிந்த பிரம்மபுரம் பகுதியை சேர்ந்த பத்திரிகையாளர்கள் விஜயகுமார், காளிமுத்து, தென்னரசு ஆகியோர் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த ஆனந்த சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் இவர்களுடன் இணைந்து சித்த மருத்துவரான விஜயலட்சுமியை மிரட்டி ரூ.12500 பணம் பெற்றுகொண்டு சென்றுள்ளனர்.

இதனை விஜயலட்சுமி ரகசியமாக தனது கைபேசியில் பதிவு செய்து இவர்கள் குறித்த புகாரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விஜயலட்சுமி வீடியோ ஆதாரத்துடன் அனுப்பியுள்ளார்

இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காட்பாடி போலீசார் மிரட்டி பணம் பறித்த நிருபர்கள் விஜயகுமார், காளிமுத்து, தென்னரசு, ஆனந்த சீனிவாசன் ஆகிய 4 பேர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பத்திரிகையாளர்கள் 4 பேர் மீது ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு , நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

Newstm.in

Trending News

Latest News

You May Like