1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு...

இன்று முதல் கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு...


தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு வெளிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக, மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, ஊரடங்கு உத்தரவில் விதிகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது. இந்நிலையில், ஹோட்டல், மளிக்கடைகள், காய்கறிக் கடைகள் மற்றும் தேனிர் கடைகள் போன்றவை இரவு 9 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கடைகளின் திறப்பு நேரம் இரவு 9 மணிக்கு பதிலாக இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.காய்கறி, டீ, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்களுக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று கட்டுப்பாடு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் இரவு 10 மணி வரை கடைகள் இயங்கலாம். பண்டிகை காலங்களில் கடைகள், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like