பரபரப்பு! விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ஆண் சடலம்!!
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில், சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பெயிண்டரான பிரபாகரன் (34) என்பவர், அவரது அலுவலகத்திலேயே தங்கி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், சம்பளத்தை பெற்றுக்கொண்டு தன்னுடைய குடும்பத்தினரை காண வீட்டிற்கு சென்ற பிரபாகரன், 4 நாட்கள் கழித்து விஜய்யின் அலுவலகத்திற்கு மீண்டும் திரும்பினார்.
உடனிருந்த மேஸ்திரி ஒருவரிடம் பரோட்டா வாங்க ரூ.100 பெற்றுக் கொண்டார். இதனையடுத்து அடுத்த நாள் காலையில் அலுவலகத்தை திறக்க மற்ற ஊழியர்கள் முற்பட்டபோது, அலுவலகம் உள்ளே பூட்டப்பட்டிருந்தது.
கதவை உடைத்து பார்த்தபோது, பிரபாகரன் கையில் பாதி பரோட்டா, வாயில் பாதி பரோட்டாவுடன் தரையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் சடலத்தை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குடிபோதையில் பரோட்டா சாப்பிட்டதில் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே முழு விவரம் தெரியவரும் என்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
newstm.in