1. Home
  2. தமிழ்நாடு

செயற்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே காரசார விவாதம்!

செயற்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே காரசார விவாதம்!


5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

துணை முதல்வர் ஓபிஎஸ் பேசும்போது, தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன், என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா, ஆனால் உங்களை(ஈபிஎஸ்)முதல்வர் ஆக்கியது சசிகலா எனத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த ஈபிஎஸ் இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான் என்று கூறினார். ஒரு முதலமைச்சராக நான் என்ன சிறப்பாக செயல்படவில்லையா? பிரதமரே எனது தலைமையிலான ஆட்சியை பாராட்டியுள்ளார், கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன் என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.

செயற்குழு கூட்டத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே காரசார விவாதம்!

இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இன்றே அறிவிக்க வேண்டும் என சில நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் வரும் 7ஆம் தேதி முதல்வர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like