1. Home
  2. தமிழ்நாடு

செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இ.பி.எஸ். பதில்..!

Q

2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் உழவர் நலன் மற்றும் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று (மார்ச் 15) காலை தாக்கல் செய்தார். பேரவைக் கூட்டத்துக்கு முன்னர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்தார். அவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தலைமையில் நடந்த அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு ஆலோசனையில் கடந்த இரண்டு நாட்களாக கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது அவரிடம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கடந்த இரு தினங்களாக உங்களைச் சந்திப்பதை தவிர்ப்பதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அதை அவரிடம் கேளுங்கள். காரணம், அவரைக் கேட்டால்தானே தெரியும்?! என்னை சந்திப்பதை அவர் ஏன் தவிர்த்தார் என்பது குறித்து அவரிடம் சென்று கேளுங்கள். இதெல்லாம் இங்கே கேட்கவேண்டிய கேள்வி இல்லை. தனிப்பட்ட முறையில் இருக்கக் கூடிய பிரச்சினைகளை எல்லாம் இங்கே பேசாதீர்கள்.
 அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படுகின்ற கட்சி. தி.மு.க. போல அடிமை ஆட்கள் இங்கு கிடையாது. நான் ஒரு சாதாரண தொண்டன். தலைவன் கிடையாது. தி.மு.க. போல வாரிசு அரசியல் இங்கு கிடையாது. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான். மற்ற கட்சிகள் எல்லாம் எங்களுக்கு எதிரியே கிடையாது. அ.தி.மு.க. வில் இருக்கும் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்படுகின்றனர். அதற்கு எந்த தடையும் கிடையாது. என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
 சட்டப்பேரைவையில் நேற்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முன்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை அவரது அறையில் தனியாக சந்தித்துப் பேசினார். மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு அவர் வழக்கமாக வருகைதரும் வழியாக இல்லாமல் கடந்த இரு நாட்களாக வேறு நுழைவாயில் பகுதியாக சட்டப்பேரவைக் வருகைகு தந்தார்.

Trending News

Latest News

You May Like