1. Home
  2. தமிழ்நாடு

மனு கொடுப்பதற்கு சிரமப்பட்ட மாற்றுத்திறனாளிகள்- உடனே EPS நெகிழ்ச்சி செயல்!

1

தென் மாவட்டங்களை டார்கெட் செய்து உள்ள எடப்பாடி பழனிசாமி, தென்காசி மாவட்டத்தில் எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை குற்றாலம் ஐந்தருவி பகுதியில் உள்ள இசக்கி ரிசார்ட் விடுதியில் தங்கியுள்ளார். அங்கு முதல்கட்டமாக மாற்றத்திறனாளிகளுடன் சந்திப்பு நடைபெற்றது.திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயலற்று இருப்பதாகவும், குறிப்பாக, திட்டங்களின் மூலமாக திமுகவினர் மட்டுமே பயனடைந்து வருகிறார்கள் என மாற்றுத்திறனாளிகள் கருத்து தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் மனு கொடுப்பதற்கு சிரமப்படுவதை அறிந்த எடப்பாடி பழனிசாமி, அவங்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மனு வாங்கினார். பின்னர் அவர்களிடம் பேசிய இபிஎஸ், ‘’அதிமுக ஆட்சியில் 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளிக்கு மின்சக்தியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடை உயர்த்திக் கொடுத்திருக்கிறோம். சென்னை மாநகரப் பேருந்துகளில் பார்வையற்றோருக்கு உதவ 10 வழித்தடங்களில் ஒலியெழுப்பும் சமிக்ஞை கருவி பொருத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் மனு கொடுப்பதற்கு சிரமப்படுவதை அறிந்த எடப்பாடி பழனிசாமி, அவங்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மனு வாங்கினார். பின்னர் அவர்களிடம் பேசிய இபிஎஸ், ‘’அதிமுக ஆட்சியில் 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளிக்கு மின்சக்தியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன. வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடை உயர்த்திக் கொடுத்திருக்கிறோம். சென்னை மாநகரப் பேருந்துகளில் பார்வையற்றோருக்கு உதவ 10 வழித்தடங்களில் ஒலியெழுப்பும் சமிக்ஞை கருவி பொருத்தப்பட்டது.

திருத்தணியைச் சேர்ந்த ஜோதி என்ற மாற்றுத் திறனாளியை உங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கிறேன். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து நமது கழகத்தில் இணைந்தார். 1,000 பேருடன் நம் கழகத்தில் இணைந்த ஜோதியிடம் இப்போது 5000 உறுப்பினர்களுடன் செயல்படுகிறார். அவரை உங்களுடன் இணைத்து விடுகிறேன். அரசாங்கத்தில் எந்தெந்த உதவிக்கு யாரை அணுக வேண்டும் என்று அவர் சிறப்பாக வழிகாட்டுவார்.

கடினமான வாழ்வை மேற்கொள்ளும் நீங்கள் இந்த வாழ்க்கை போராட்டத்தில் வெற்றிபெற எனது அரசு அமைந்தவுடன் தேவையான உதவிகளை செய்து கொடுப்பேன். மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு முடிந்த அளவு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பேன். எத்தனையோ பேரை சந்தித்தாலும் உங்களை பார்க்கும்போதுதான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உடலில் குறை இருந்தாலும், உள்ளத்தில் நீங்கள்தான் முழுமை பெற்றவர்கள்…’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார்.

Trending News

Latest News

You May Like