1. Home
  2. தமிழ்நாடு

விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு செல்ல தடை..!

1

கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு வழக்கம் போல் இன்று காலை படகு போக்குவரத்து தொடங்கியது. இடையிடையே மழைபெய்வதும், நிற்பதும் போன்ற நிலையில் நண் பகல் போன்று கடலில் காற்றின் வேகம் அதிகரித்த நிலையில், கடலில் உள்ள படகு துறையில் படகை நிறுத்தி சுற்றுலா பயணிகளை இறக்க முடியாத அளவுக்கு அலையின் வேகம் அதிகமாக இருந்ததால், சுற்றுலா பயணிகளுடன் கரைக்கு படகு திரும்பிய நிலையிலும், மழையின் காரணமாக படகு போக்குவரத்து இன்று நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கன்னியாகுமரியில் பெய்துவரும் கனமழை காரணமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like