1. Home
  2. தமிழ்நாடு

ரயில் பாதை அமைக்கும் நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை..!

1

மத்திய அரசின் அதிவேக ரயில் பாதை அமைக்கும் நிறுவனமான தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் பல்வேறு திட்டங்களில் பணிபுரிய தேவையான ஆட்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்
உதவி தொழில்நுட்ப மேனேஜர் 18
ஜூனியர் தொழில்நுட்ப மேனேஜர் 18
மொத்தம் 36

இவை பொதுப் பிரிவு - 17, ஒபிசி - 9, எஸ்சி - 5, எஸ்டி - 2 மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 2 என நிரப்பப்படுகிறது.

வயது வரம்பு
இப்பணியிடங்களுக்கு ஜூலை 31-ம் தேதியின்படி, அதிகபடியாக வயது வரம்பு 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் மத்திய அரசு விதிமுறைகளின்படி, எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கு 5 மற்றும் 3 வருடங்கள் தளர்வு உள்ளது.


கல்வித்தகுதி
உதவி தொழில்நுட்ப மேனேஜர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல், கணினி அறிவியல், தகவல் தொடர்பியல் ஆகியவற்றில் B.E./B.Tech முடித்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 4 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஜூனியர் தொழில்நுட்ப மேனேஜர் அப்தவிக்கு எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் B.E./B.Tech பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.


சம்பள விவரம்
உதவி தொழில்நுட்ப மேனேஜர் பதவிக்கு மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். வருடத்திற்கு ரூ.18 லட்சம் தோராயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் தொழில்நுட்ப மேனேஜர் பதவிக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இப்பதவிக்கு வருடத்திற்கு ரூ.15 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை
மத்திய அரசின் தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது. விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள். அதனைத்தொடர்ந்து, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும்போது தேவையான தகவல்களை சரியாக அளிக்க வேண்டும். விண்ணப்பத்தில் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். ஒருவேளை விண்ணப்பதார்கள் அதிகரிக்கும் நிலையில், தேர்வு செய்யப்படும் முறை நிறுவனத்தின் மூலம் நிர்ணயிக்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்படுவார்கள். தேவையின் அடிப்படையில் 2 வருடங்கள் அதிகரிக்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை
உதவி தொழில்நுட்ப மேனேஜர் மற்றும் ஜூனியர் தொழில்நுட்ப மேனேஜர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் https://www.nhsrcl.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து தபால் மூலமூம் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் தொடங்கிய் நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தபால் வழியாக விண்ணப்பங்கள் செப்டம்பர் 22-ம் தேதியுடன் சென்றடைய வேண்டும். 

அனுப்ப வேண்டிய முகவரி
General Manager/HR, National High Speed Rail Corporation Limited, World Trade Centre, 5th Floor, Tower D, Nauroji Nagar, New
Delhi – 110029.

முக்கிய நாட்கள்

விவரம் தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.09.2025
தபால் மூலம் கடைசி நாள் 22.09.2025

Trending News

Latest News

You May Like