இலங்கை அதிபருடன் எலான் மஸ்க் சந்திப்பு..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/da9165a47837317d1f5ab61b84538bb5.jpg?width=836&height=470&resizemode=4)
தொழிலதிபர் எலான் மஸ்க் இந்தோனோசியாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து, இலங்கையில் ஸ்டார்லிங்க் சேவைகளுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்து வருகிறார். இலங்கை நீர் வழங்கல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ள எக்ஸ்தளப் பதிவில், "அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உலக நீர்மன்றத்தில் பங்கேற்பதற்காக பாலியில் 2 நாள் பயணமாகச் சென்றுள்ளார். இன்று எலான் மஸ்க் அவர்களைச் சந்தித்து, இலங்கையின் மீட்பு, பொருளாதார திறன் மற்றும் முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர்.
தொலைதூர இடங்களுக்கு இணைப்பைக் கொண்டு வருவது, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு அடைதல் குறித்து தீவிரமாக உரையாடினர்" என்று கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் எலான் மஸ்க் பேசும் விடியோவையும் ஜீவன் தொண்டமான் பகிர்ந்துள்ளார்.