பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/59ae5ff51f5ca6de040a82c3bb643d94.jpg?width=836&height=470&resizemode=4)
இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி இன்று பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் 3-வது முறை பிரதமராக பதவியேற்க போகும் மோடிக்கு, உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, டுவிட்டர் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். இந்தியாவில் எனது நிறுவனங்கள் உற்சாகமான பணிகளை செய்வதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீடு மற்றும் ஸ்டார் லிங் திட்டம் குறித்த அறிவிப்புகளை எலான் மஸ்க் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரது பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் எலான் மஸ்க் இந்தியாவிற்கு வருகை தருவார் என்றும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.