மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள்..! ஏ.சியை 25-லிருந்து...
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/0718e77f8567fcdbe3a17d869904974a.webp?width=836&height=470&resizemode=4)
கேரளத்தில் கடும் மின் பற்றாக்குறையால் மோட்டார் பம்ப், ஏ.சி. உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஏ.சியை 25-லிருந்து 27 டிகிரி செல்சியஸ் வைத்து பயன்படுத்த கேரள மக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சாதனை அளவாக கேரளத்தில் திங்கள்கிழமை 11 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மின்தட்டுப்பாட்டை சமாளிக்க நாளொன்றுக்கு 500 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையில் வாங்க உள்ளோம் கேரள மின்வாரியம் தெரிவித்துள்ளது.