தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/53274d637e2696a1815f2655ce80b8c1.webp?width=836&height=470&resizemode=4)
தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கு மேலாக அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6.00 மணியுடன் ஓய்ந்தது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் ஏப்ரல் 19ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 21 மாநிலங்களுக்கு உட்பட 102 தொகுதிகளில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.