1. Home
  2. தமிழ்நாடு

கல்விக்கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு..! எந்தெந்த வங்கிகளில் பெறலாம்?

1

அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நலனை கருதி கூட்டுறவு நிறுவனங்கள் வழங்கும் கடனுக்கான உச்சவரம்பு உயர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் கல்விக் கடனுக்கான உச்சவரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

புத்தகம், தங்கும் விடுதி, உணவு உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த ஏதுவாக வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி 2, 3-ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது.

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தால் சிறுபான்மையின் மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கி மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்கூட்டுறவு கடன் சங்கம் மூலம் மாணவர்கள் கடன் பெறலாம் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like