1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் 3-ம் தேதி அண்ணாவின் நினைவிடத்தில் எடப்பாடி மலர்தூவி மரியாதை..!

1

அ.தி.மு.க. தலைமை  கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வரும் 3-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.  அதனைத் தொடர்ந்து தலைமைக் கழகச் செயலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர்.  

இந்நிகழ்ச்சியில், மாவட்ட  செயலாளர்கள்,  நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்;  சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள்; மாவட்ட நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரநிதிகளும், உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாடு மற்றும் கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந் ரா, தெலுங்கானா, மகராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வரும் 3-ம் தேதியன்று ஆங்காங்கே பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும்; ஆங்காங்கே பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படங்களை வைத்து மலர் அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like