ஜூலை முதல் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி..! பயண திட்டம் வெளியீடு..!

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் நடைபெற உள்ள இந்த தொடர் பிரச்சார சுற்றுப்பயணம் ஜூலை 7ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்குகிறது. அன்றைய தினம் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கவுண்டம்பாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் நடைபெறும்.
ஜூலை எட்டாம் தேதி செவ்வாய்க்கிழமை அதிமுக கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஜூலை 10ஆம் தேதி வியாழக்கிழமை அன்று விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம் மேற்கொள்கிறார்.
ஜூலை 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை வானூர், மயிலம், செஞ்சி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஜூலை 12ஆம் தேதி சனிக்கிழமை அன்று கடலூர், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்கிறார்.
ஜூலை 14ஆம் தேதி திங்கட்கிழமை அன்று குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும்,
ஜூலை 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள பட உள்ளது.
ஜூலை 16ஆம் தேதி புதன்கிழமை அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், திருவாரூர் நாகை மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் பிரச்சாரம் செய்கிறார்.
ஜூலை 17ஆம் தேதி வியாழக்கிழமை நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
ஜூலை 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மன்னார்குடி, திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்கிறார்.
ஜூலை 19ஆம் தேதி சனிக்கிழமை அன்று பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு ஆகிய மூன்று தொகுதிகளிலும் ஜூலை 21ஆம் தேதி திங்கள்கிழமை ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய மூன்று தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
மேற்கு மண்டலத்தில் ஓரு சில தொகுதிகளிலும், வட மாவட்டங்களில் ஓரு சில தொகுதிகளிலும் டெல்டா மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி தற்போது சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அடுத்தகட்ட சுற்றுப் பயணத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்வார் என்று கூறப்படுகிறது.