1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்படுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி..!

1

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளாருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டு தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்டு வருகிறார். அதோடு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக அரசால் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் அமல்படுத்துவோம் என்று கூறிவருகிறார்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளாருமான எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டு தொகுதி வாரியாக மக்களை சந்தித்து வருகிறார். திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை பட்டியலிட்டு வருகிறார். அதோடு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக அரசால் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் அமல்படுத்துவோம் என்று கூறிவருகிறார்.

மேலும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருக்கிறார். வரக்கூடிய சட்டமன்ற பொது தேர்தலில் திமுக ஆட்சி அமைக்கும் என்று பகல் கனவு காண்கிறார். நீங்கள் கூட்டணியை நம்பி இருக்கிறீர்கள் நாங்கள் இங்கே இருக்கக் கூடிய மக்களை நம்பி இருக்கிறோம்.

யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்று தீர்மானம் செய்யக்கூடியவர்கள் மக்களாகிய நீங்கள் தானே! மக்கள் நினைத்தால் தான் யாரும் ஆட்சிக்கு வர முடியும். அதிமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் நினைத்து விட்டார்கள், முடிவு செய்துவிட்டார்கள். வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளோடு பெரும்பான்மையான வாக்குகள் பெற்று ஆட்சி அமைக்க போகிறது.

ஸ்டாலின் அவர்களே மக்களுக்கு உங்கள் மீதும், உங்கள் அரசு மீதும் கட்சி மீதும் நம்பிக்கை இல்லை. வீடு வீடாக சென்று எங்களது கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று திட்டம் தீட்டி இருக்கக்கூடிய கூடிய கட்சி திமுக கட்சி.


வரும் ஆண்டு நடைபெறக் கூடிய சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும். ஒரு கட்சிக்கு அந்த தொண்டர்கள் தான் பலம். அதிமுக தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கொண்ட ஒரு கட்சி. அதனால் தான் மக்கள் அதிமுகவை விரும்புகிறார்கள். திமுகவை போன்று எந்த ஒரு கட்சியும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்கள் சேர்த்தது கிடையாது.

மக்கள் நினைத்தால் எந்த கட்சியிலும் அவர்கள் விருப்பம் போல் சேரலாம். அது தான் தமிழகத்தின் நிலைமை. ஆனால் திமுக அவ்வாறு கிடையாது. திமுக வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. மக்களாகிய நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம். அதிமுக உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்” என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like