எல்லா தீபாவளிக்கும் அற்புதமான சேலை வழங்கப்படும்” -எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி..!
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், எல்லா தீபாவளிக்கும் அற்புதமான சேலை வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி..
தமிழகத்தில் தற்போதே தேர்தல் களம் மெல்ல மெல்ல சூடுபிடித்து வருகிறது.அனைத்துக் கட்சிகளையும் முந்திக்கொண்டு எடப்பாடி பழனிசாமி தற்போதே தேர்தல் சுற்றுப் பயணத்தை நடத்தி வருகிறார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் கோவையில் ஜூலை 7ஆம் தேதி பயணம் தொடங்கிய அவர், தற்போது டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு தொகுதியாக திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அத்துடன் விவசாயிகள், நெசவாளர்கள் என பல தரப்பு மக்களையும் நேரில் சந்தித்து கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறார். குறிப்பாக தனது பரப்புரையின் போது திமுக அரசில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்றும், ஊழல் மலிந்துவிட்டதாகவும் காட்டமாகக் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்த நிலையில் கும்பகோணத்தில் நெசவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது பேசிய இபிஎஸ், “அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்த உடன் தாலிக்குத் தங்கம் திட்டம் கொண்டு வரப்படும். தாலிக்கு தங்கம் திட்டத்தில் மணப் பெண்களுக்கு கைத்தறி பட்டுப் புடவைகளும் வழங்கப்படும். பட்டுப்புடவையை கைத்தறி நெசவாளர்களிடம் இருந்து அரசே கொள்முதல் செய்து வழங்கும்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பாபநாசத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன. வினாத்தாளில் பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை. தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள்களை முறையாக சீல் வைத்துக்கொண்டு போகவில்லை. ஆகவே, குரூப் 4 தேர்வை ரத்து செய்து விட்டு மீண்டும் மறு தேர்வு நடத்த வேண்டும். இந்த தேர்ச்சியை வைத்து பணியமர்த்தினால், அதிமுக ஆட்சிக்கு வந்ததால் அந்த பணியிடங்கள் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
அதிமுக ஆட்சி ஒன்றும் செய்யவில்லை என மு.க.ஸ்டாலின் பேசுகிறார். 2011 – 2021 வரை அதிமுக ஆட்சியில் செய்ததை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். இது தெரியாமல் வெளியில் பேச வேண்டாம். அதிமுக ஆட்சியில் தான் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 75 ஆயிரம் பேர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், புதிதாக இதுவரை யாரையும் நியமிக்கவில்லை.
திமுகவுக்கு தான் சிறுபான்மை மக்களின் வாக்குகள் என்று பேசுகிறார்கள். சிறுபான்மை மக்களை ஏமாற்றுவதே திமுகதான். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சியாக அதிமுக உள்ளது. சிறுபான்மையினர் என்பதால்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமுக்கு திமுக வாக்களிக்கவில்லை.அதிமுகவை பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. தேர்தல் சமயத்தில் வாக்குகளை பெற அமைப்பது கூட்டணி. அதிமுக கொள்கையை எப்போதும் விட்டுக்கொடுக்காது” என்று பேசினார்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வாக்குறுதி கொடுத்துள்ளார் இபிஎஸ். அதிமுக ஆட்சி அமைந்தால் எல்லா தீபாவளிக்கும் அற்புதமான சேலை வழங்கப்படும்” -எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
#WATCH | “அதிமுக ஆட்சி அமைந்தால் எல்லா தீபாவளிக்கும் அற்புதமான சேலை வழங்கப்படும்” -எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி#SunNews | #EdappadiPalanisamy | #Election2026 pic.twitter.com/5XrvQb6Qna
— Sun News (@sunnewstamil) July 23, 2025