1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்காக நீர்மோர்ப் பந்தலைத் திறந்த எடப்பாடி பழனிசாமி..!

1

சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 105 டிகிரிக்கு மேல் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும், அரசும் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நீர்மோர் பந்தல் திறக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

அவரைத் தொடர்ந்து இளைஞர் நலன் துறை அமைச்சரும் தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.  

நேற்று இரவு முதலமைச்சர் ஸ்டாலின் அரசுரீதியாகச் செய்யப்படும் சில நடவடிக்கைகளைப் பட்டியலிட்டிருந்தார். 

இந்நிலையில், சேலம் சூரமங்கலம் பகுதியில் அ.தி.மு.க.வின் மாநகர் மாவட்ட அமைப்பின் சார்பில் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் நீர் மோர் பந்தலைத் திறந்துவைத்தார். அப்போது, மோர், பழங்களையும் அவர் அங்கு வந்த பொதுமக்களுக்கு வழங்கினார். 

Trending News

Latest News

You May Like