தினபூமி பத்திரிக்கை உரிமையாளர் உயிரிழப்பு - எடப்பாடி பழனிசாமி இரங்கல்..!

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் உள்ள தடுப்பூச்சுவரில் மோதி, கண்டெய்னரில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த தினபூமி பத்திரிகை உரிமையாளர் மணிமாறன் உயிரிழந்தார்.
இந்நிலையில் தினபூமி பத்திரிக்கை உரிமையாளர் மறைவிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்
அதில்,தினபூமி பத்திரிக்கை உரிமையாளர் திரு. மணிமாறன் அவர்கள் இன்று கோவில்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் பயணம் செய்த அவரது மகன் திரு.ரமேஷ் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தினபூமி பத்திரிக்கை உரிமையாளர்
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) October 14, 2024
திரு. மணிமாறன் அவர்கள் இன்று கோவில்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் பயணம் செய்த அவரது மகன்…