திமுக புள்ளிகளை வளைத்துப்போட்ட எடப்பாடி பழனிசாமி !

திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 200 பேர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
முதலமைச்சரின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட 200 க்கும் அதிகமானோர் அதிமுகவில் இணைந்தனர்.
கழகத்தில் இணைந்தவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொன்னாடை அணிவித்து வாழ்த்தி வரவேற்றார். அப்போது, அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.