வேலூரில் இன்று நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு..!

வேலூரில் இன்று நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு..!

வேலூரில் இன்று நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு..!
X

வேலூர் மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவான இந்த நில அதிர்வு பெரிய அளவில் உணரப்படவில்லை.

அதேவேளை கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன. ஆனாலும், இந்த நில அதிர்வால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இன்று பிற்பகல் 3.14 மணியளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் சித்தூரை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வேலூர் மாவட்டத்திலும் உணரப்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வேலூரில் இருந்து 50 கிலோமீட்டர் மேற்கு - வடமேற்கு திசையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it