1. Home
  2. தமிழ்நாடு

தலைநகர் சென்னையில் நிலநடுக்கம்... அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

1

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை அருகே ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 58 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் கட்டடங்களில் லேசான விரிசல் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர். சுமார் 3 வினாடிகள் நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை. இதனிடையே ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது.


 

Trending News

Latest News

You May Like