1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!

1

சென்னையில் செப்டம்பர் 15 முதல் 17-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் ஒத்திகை பயிற்சியை தேசிய பாதுகாப்பு படையினர் மேற்கொள்ள இருக்கின்றனர்.பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் அதனை முறியடிக்கும் GANDIV-V என்ற ஒத்திகை பயிற்சி நடைபெறுகிறது.

அதனை முன்னிட்டு சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் வரும் 17-ம் தேதி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதித்துள்ளனர்.மேலும், 3 நாட்களுக்கு சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒத்திகையின் போது அவசர ஊர்திகள் செல்வது போன்ற நிகழ்வுகள் இருக்கும் எனவும் பொதுமக்கள் அதை கண்டு அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like