1. Home
  2. தமிழ்நாடு

திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற திரௌபதி பட நடிகர் கைது..!

திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற திரௌபதி பட நடிகர் கைது..!


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

எனினும் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும், மதுப்பாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் வீடு ஓன்றில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனையில் ஈடுபட்ட  திரெளபதி பட துணை நடிகர் ரிஸ்வான் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரது வீட்டில் இருந்து  57 குவார்ட்டர் பாட்டில்கள்,  12 பீர் பாட்டில்கள், ரூ.2,300 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் அளித்த தகவலின்படி சாலிகிராமத்தைச் சேர்ந்த சினிமா புரொடக்‌ஷன் வேலை பார்க்கும் பிரதீப் (31) மற்றும் அவரது வாகன ஓட்டுனரான சூளைமேடு பகுதியை சேர்ந்த தேவராஜ் (41) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற திரௌபதி பட நடிகர் கைது..!

மேலும்  தேவராஜ் காரில் பதுக்கி வைத்து இருந்த 189 குவார்ட்டர் பாட்டில்கள், ரூ.20,000 ரொக்கம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

திரௌபதி உள்ளிட்ட சினிமா படங்களில் நடித்த துணை நடிகரான ரிஸ்வான், தேவராஜிடம் இருந்து குவார்ட்டர் பாட்டில் ஒன்று ரூ.1000 கொடுத்து வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து சினிமா துறையில் உள்ள தனது நண்பர்களுக்கு ரூ.1200க்கு விலை பேசி அதை அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று சப்ளை செய்து வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓட்டுநர் தேவராஜ் யாரிடம் இருந்து  மதுபானம் வாங்கினார் என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று  வருகிறது.

newstm.in 

Trending News

Latest News

You May Like