1. Home
  2. தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு டபுள் ட்ரீட்..!பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக உயர்வு!

1

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டசபை கூட்டத்தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக இரட்டிப்பாக உயர்த்தப்படும் என்றும் பொங்கல் போனஸ் மற்றும் சி, டி பிரிவு ஓய்வூதியம் ரூ.1,000 ஆக அதிகரிக்கப்படும் என்றும் அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
 

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அந்த அரசாணையின் படி, 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடரில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகளின் விதி 110 இன் கீழ், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டமன்றத் தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

அவற்றில் ஒன்று, அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் பண்டிகைகளைச் சிறப்பாகக் கொண்டாடிடும் வகையில், ஏற்கனவே இதுவரை வழங்கப்பட்டு வரும் பத்தாயிரம் ரூபாய் பண்டிகை கால முன்பணம் தற்போது இருபதாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதனால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு கவனமாக பரிசீலித்த பிறகு, உள்ளாட்சி அமைப்புகள், உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் விழா முன்பணம் பெற தகுதியுடைய ஊழியர்களின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் ஆகியோருக்கு செலுத்த வேண்டிய விழா முன்பணத்தை ரூ.10,000/- இலிருந்து ரூ.20,000/- ஆக (ரூபாய் இருபதாயிரம் மட்டும்) உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like