1. Home
  2. தமிழ்நாடு

இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க..! ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய...

1

தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும்.

 

அந்த வகையில், 2025ஆம் ஆண்டில் மார்ச் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட, மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் மார்ச் 8ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

 

இந்த குறைதீர் கூட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவிக்கலாம்.  

மக்களின் குறைகளை விரைந்து தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ரேஷன் அட்டைகள் தான் பலருக்கும் முகவரி சான்றாக இருக்கிறது. மேலும், பல்வேறு அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் அட்டை முக்கியமானதாக இருக்கிறது. எனவே, சென்னை மக்கள் ரேஷன் அட்டை மற்றும் ரேஷன் பொருள்கள் சார்ந்து ஏதும் பிரச்னை இருந்தால் உடனே அதனை இக்கூட்டத்தின் மூலம் சீர்செய்து கொள்ளலாம்.     

Trending News

Latest News

You May Like