மிஸ் பண்ணிடாதீங்க..!அபூர்வ மரகத நடராஜரை தரிசனம் செய்ய ஏற்பாடு..!

இதை முன்னிட்டு கோவிலில் அமைந்துள்ள அபூர்வ மரகத நடராஜர் சன்னதியானது நேற்று நள்ளிரவு திறக்கப்பட்டு மரகத நடராஜர் சிலை மீது பூசப்பட்ட சந்தனம் களையப்பட்டது. அப்போது திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
2010-ல் கும்பாபிஷேகம் நடந்தபோதும் பச்சை மரகத நடராஜருக்கு பூசப்பட்டிருந்த சந்தனக்காப்பு களையப்பட்டு மூன்று நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோன்று இந்த ஆண்டு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சந்தனக்காப்பு களையப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக தினமான 4-ம் தேதி வரை சந்தனாதி தைலம் பூசப்பட்ட பச்சை மரகத நடராஜரை பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் மாலையில் சந்தனம் சார்த்தப்பட்டு மீண்டும் நடராஜர் சன்னதி சார்த்தப்படுகிறது.