1. Home
  2. தமிழ்நாடு

அட்சய திருதியை அன்று மறந்தும் வீட்டில் இதெல்லாம் செய்து விடாதீர்கள்..!

1

இந்துக்களின் மிக முக்கியமான, புனிதமான, பாரம்பரிய வழிபாட்டு நாளாக கருதப்படுவது அட்சய திருதியை நாளாகும். அட்சய திருதியை என்பது செல்வ செழிப்பையும், மகிழ்ச்சியையும், மகாலட்சுமியையும் வீட்டிற்கு வரவேற்கும் நாளாகும். இது அளவில்லாத செல்வத்தை பெறுவதற்கான முக்கிய நாளாக கருதப்படுவதால் இந்த நாளில் மகாலட்சுமியையும், மகாவிஷ்ணுவையும் வழிபடுவது சிறப்புக்குரியதாகும். இந்த நாளில் விரதம் இருப்பது, தான தர்மங்கள் செய்வது, மந்திர ஜபம் செய்வது, யாகங்கள் செய்வது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, புதிய தொழில்கள் துவங்குவது, திருமணம் செய்வது உள்ளிட்டவைகள் சிறப்பான பலன்களை தரும் என்பது அனைவருக்கும் தெரியும்.

அட்சய திருதியை என்பது பெண்களுக்கு ஏற்ற சிறப்பான நாளாகும். இந்த நாளில் தான் பெண்கள் தங்களின் கணவரின் அதிர்ஷ்டம் மற்றும் சிறப்பான வாழ்க்கைக்காக வேண்டிக் கொள்கிறார்கள். அட்சய திருதியை நாளில் தான் திரெளபதி, கிருஷ்ண பகவானை வேண்டி, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரத்தை பெற்று, பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும் போது அவர்களின் பசியை போக்கியதாக புராணங்கள் சொல்கின்றன. இது பரசுராமரின் அவதார தினம் என்பதாலும் இது திருமால் வழிபாட்டிற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.

இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30, 2025 புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்படிப்பட்ட ரோகிணி நட்சத்திரம் மற்றும் புதன்கிழமை சேர்ந்து வரும் நாளில் இந்த ஆண்டு அட்சய திருதியை அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது ஆகும். ஏப்ரல் 29ம் தேதி இரவு 08.49 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 30ம் தேதி மாலை 06.41 வரை திரிதியை திதி உள்ளது.

அன்று காலை 5:41 மணி முதல் 11.55 மணி வரை பூஜை செய்ய நல்ல நேரம். தங்கம் வாங்க ஏப்ரல் 29 மாலை முதல் ஏப்ரல் 30 மதியம் 2:12 மணி வரை நல்ல நேரம். இந்த நாளில் செய்யும் தானம், தர்மம் என்றென்றும் பலன் தரும். தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
எனவே, இந்த நாளில் செய்யும் ஜெபம், யாகம், பித்ரு-தர்ப்பணம், தானம் போன்ற ஆன்மீக செயல்கள் என்றென்றும் பலன் தரும். இந்த செயல்களின் பலன் எப்போதும் நம்முடன் இருக்கும். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம் வரும் என்று நம்புகிறார்கள்.

ஏப்ரல் 30 காலை 5:41 மணி முதல் மதியம் 2:12 மணி வரை தங்கம் வாங்க மிகவும் நல்ல நேரம். இந்த நேரத்தில் லட்சுமி மற்றும் குபேரருக்கு பூஜை செய்யலாம். லட்சுமி தேவியை வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும். இந்த வருடம் அட்சய திருதியை அன்று சோபன் யோகம் உள்ளது. இது வைசாக சுக்ல பக்ஷ திருதியை திதியில் பகல் 12:02 மணி வரை இருக்கும். கூடவே சர்வார்த்த சித்தி யோகமும் உள்ளது. இந்த யோகத்தில் லட்சுமி நாராயண பூஜை செய்தால் செல்வம் பெருகும். லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.

அட்சய திருதியை அன்று என்ன செய்யலாம்?


- லட்சுமி குபேர பூஜை செய்யுங்கள்.
- ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.
- புதிய தொழில் தொடங்கலாம்.
- வீடு, மனை வாங்கலாம்.
- தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும்.

 அட்சய திருதியை நாளில் இது போன்ற சில விஷயங்களை செய்யாமல் தவிர்த்து விடுவது நல்லது.

* அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதால் வாழ்வில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். அதனால் தங்கம் போன்ற ஆபரணங்கள் வாங்குவது சிறப்பு.

* இந்த நாள் அதிர்ஷ்டத்தை தரக் கூடிய அற்புதமான நாள் என்பதால் புதிய தொழில், வியாபாரம் ஆகியவற்றை துவங்கலாம். வாகனங்கள், வீடு போன்ற புதிய சொத்துக்களை வாங்கலாம்.

* அட்சய திருதியை அன்று ரியல் எஸ்டேட், வியாபாரம் உள்ளிட்டவற்றில் புதிய முதலீடு செய்யலாம். இது அதிர்ஷ்டத்தை நமக்கு தேடித் தரும்.

* புதிய பொருட்கள் எதுவும் வாங்க முடியாதவர்கள் தெய்வ வழிபாடு, தியானம், மந்திர ஜெபம், யாகம் போன்றவற்றில் ஈடுபடலாம். இது நம்முடைய ஆன்மிக பலத்தை அதிகரிக்க செய்து, தெய்வ அருளை பெற்றுத் தரும்.

* இந்த நாளில் மகாலட்சுமி மற்றும் பெருமாளுக்கு, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காத சாத்வீகமான உணவுகளை மட்டுமே நைவேத்தியமாக படைத்து, நாமும் உண்ண வேண்டும்.

அட்சய திருதியை அன்று செய்யக் கூடாதவை :

* அட்சய திருதியை அதிர்ஷ்டத்தை தரக் கூடிய நாளாகும். அதனால் இந்த நாளில் வீட்டின் எந்த ஒரு அறையையும் இருட்டாக இருக்கும் படி வைத்திருக்கக் கூடாது. வீட்டில் உள்ள அனைத்து அறைகளும் வெளிச்சம் நிறைந்ததாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

* அட்சய திருதியை அன்று மகாலட்சுமியையும், விநாயகரையும் தனித் தனியாக வழிபடக் கூடாது. இந்த இரு தெய்வங்களையும் ஒன்றாக வைத்து வழிபட்டால் மட்டுமே செல்வம் வளம் கிடைக்கும்.

* ஏதாவது வாங்குவதற்கு என்று வெளியில் சென்று விட்டு வெறும் கையுடன் வீட்டிற்கு திரும்பாதீர்கள். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் தான் வாங்க வேண்டும் என்பது கிடையாது. வீட்டிற்கு தேவையான மங்கல பொருட்கள் ஏதாவது கூட வாங்கி வரலாம். நீங்கள் நினைத்து சென்ற பொருள் கிடைக்கவில்லை என மறந்தும் வெறும் கையுடன் திரும்பி வந்து விடாதீர்கள்.


மறந்தும் செய்யக் கூடாத விஷயங்கள் :

* அட்சய திருதியை அன்று பூஜையில் வைத்து வேண்டிக் கொண்டு சுவாமி கயிறு, ரட்சை ஏதாவது கட்டிக் கொள்வதாக இருந்தால் அந்த கயிறு மிக நீண்டதாக இல்லாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

* அட்சய திருதியை அன்று கடன் வாங்கவோ, கடனை திருப்பிக் கொடுக்கவோ செய்யயாதீர்கள்.

* அட்சய திருதியை அன்று யார் வந்து யாசகம் கேட்டாலும், காசோ அல்லது உணவோ தவறியும் கூட இல்லை என்று சொல்லி விடாதீர்கள்.

* யாரிடமும் கோபப்படவோ, எதிர்மறையான சொற்களை பேசுவதோ கூடாது. கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது.

* அட்சய திருதியை நாளில் உங்களின் இஷ்ட தெய்வத்திற்கு அல்லது பிரச்சனைகள் தீர வேண்டும் என்பதற்காகவோ, வேண்டுதலுக்காகவோ விரதம் இருக்க துவங்கலாமே தவிர, இந்த நாளில் விரதத்தை நிறைவு செய்யக் கூடாது.

Trending News

Latest News

You May Like