1. Home
  2. தமிழ்நாடு

அதிகமா காபி அல்லது டீ குடிக்காதீங்க... குடித்தால்.... ஐ.சி.எம்.ஆர் தரும் எச்சரிக்கை..!

1

பெரியவர்கள் மட்டுமன்றி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியிலும் டீ காப்பி மோகம் அதிகரித்து வருகிறது. வெயில் மண்டையை கொளுத்தினாலும் டீ லவ்வர் என சொல்லி சுடசுட டீ குடித்து வருகிறார்கள்.

மேலும், டீ அல்லது காப்பிதான் இன்றைய இளைஞர்களின் காலை உணவாகவே இருக்கிறது. அதிகமாக டீ மற்றும் காப்பியை குடிப்பதானால் உடலில் தேவையற்ற உபாதைகள் ஏற்படும் என பல ஆய்வுகள் தெளிவிபடுத்தி இருக்கிறது. ஆனாலும், இந்தியர்களின் உணவு முறையில் டீ மற்றும் காப்பி முக்கிய இடத்தை பிடித்து இருக்கிறது. அந்த வகையில், டீ காப்பி குறித்து முக்கிய எச்சரிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி ஆணையம் சொல்லி இருக்கிறது.

இது குறித்து ICMR வெளியிட்ட அறிக்கையில், "டீ மற்றும் காப்பியில் காஃபின் (Coffine) கலந்துள்ளது. இது மத்திய நரம்பு மண்டலத்தையும் உடலியல் சார்பு நிலையையும் தூண்டும். 150 மில்லி கப் காப்பியில் 80-120 மில்லி கிராம் காஃபின் இருக்கிறது. இன்ஸ்டண்ட் காப்பியில் 50 - 65 மில்லிகிராமும், தேநீரில் 30 - 65 மில்லிகிராம் காஃபினும் இருக்கிறது. ஒரு நாளுக்கு 300 மில்லி கிராமிற்கு அதிகமாக காஃபினை சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லதல்ல.

அதேபோல சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் பின்பும் டீ, காபி குடிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இந்த பானங்களில் டான்னின்ஸ் உள்ளது. இந்த டான்னின்ஸ் உணவில் இருந்து உடலுக்கு இரும்பு சத்துக்கள் இந்த பானங்களால் தடைபடும். இதனால் அனீமியா போன்ற உடல் நலக்குறைவு ஏற்படும். தொடர்ந்து அதிகப்படியான காபி, டீ குடிப்பது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்" என மருத்துவ ஆணையத்தின் அறிக்கை தெரிவித்து இருக்கிறது.

எனினும், பாலில் செய்யப்படாத டீ அதாவது பிளாக் டீ குடிப்பதால் இரத்த ஒட்டம் மேம்படுமாம். கரோனரி தமனி நோய் மற்றும் வயிற்று புற்று நோய் ஆகிய அபாயத்தை கட்டுப்படுத்துமாம். ஆகையால், சாப்படிவதற்கு முன்பும் பின்பும் டீ மற்றும் காப்பியை அறவே தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லதாகும்.

Trending News

Latest News

You May Like