சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம் - சென்னை காவல்துறை..!
சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஆயுத பூஜையில் திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களை உடைக்கும் பழக்கம் உள்ளது.
சாலையில் உடைப்பது வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தானது.
சாலை பாதுகாப்புக்காக, சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம்.
அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.png)