1. Home
  2. தமிழ்நாடு

கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நாய் கண்காட்சி..!

1

கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பாக நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.இந்த நாய்கள் கண்காட்சியில் தமிழ்நாட்டு இன நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை இனங்களும் மற்றும் பிற வெளிநாட்டு வகை நாய்களான ஜெர்மன் செப்பர்ட், கிரேட் டேன், பாக்ஸர், புள் டாக், டால்மேசன், கிரெடவுன், சைபீரியன் ஹஸ்கி உள்ளிட்ட பல்வேறு வகைகள் என சுமார் 300 க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன.

இந்த நாய்கள் கண்காட்சியில் வயது, உடல் அமைப்பு, உயரம், எடை, நாய்களின் ஓடும் வேகம், ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த நாய்க்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து கண்காட்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர் தனுராய்  கூறுகையில், அழிந்து வரும் பல்வேறு வகையான நாய் இனங்களை மீட்கும் முயற்சியாகவும், நாய்கள் வளர்க்கும் ஆர்வத்தை பொதுமக்களிடம் அதிக அளவில் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற கண்காட்சி நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like