1. Home
  2. தமிழ்நாடு

சிக்கனில் விஷம் வைத்து நாய் கொலை..!

Q

கோவையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (29). விலங்குகள் நல ஆர்வலர். சம்பவத்தன்று இவருக்கு கோவை கவுண்டம்பாளையம் உழைப்பாளர் சாலை வீதியில் 4 நாய்கள் ரத்த வாந்தி எடுத்து மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் வந்தது.
அவர் அங்கு சென்று பார்த்த போது ஒரு நாய் இறந்து கிடந்தது. ஒரு நாய் அங்கிருந்து ஓடிவிட்ட நிலையில் மற்ற 2 நாய்களை மீட்டு வெள்ளக்கிணறு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் சாய்பாபா காலனியில் உள்ள கிளினிக்கிற்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் நாய்களை பரிசோதித்துவிட்டு மர்மநபர் சிக்கனில் விஷம் வைத்து நாய்களுக்கு கொடுத்திருப்பதாக கூறினார்.
இது குறித்து கோவை துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like