நேர்மை, உண்மை, பொறுமை விஜய்க்கு இருக்கிறதா ? நடிகை விந்தியா எழுப்பும் கேள்வி!

அதிமுக மகளிர் அணி தி.மு.க அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும் எனவும் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை விந்தியா கலந்து கொண்டார்.
தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்ததுடன், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கருத்து தெரிவித்தார். அரசியல் சினிமா மாதிரி இல்லை என்றும், விஜய்க்கு நேர்மை, உண்மை, பொறுமை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும் என்றும் விந்தியா கூறினார்.
எதிர்க் கட்சிகளை மத்திய அரசை குறை சொல்வதையே நோக்கமாகக் கொண்டு இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தி.மு.க வையும், தி.மு.க அமைச்சர்களையும், காரி துப்பிக் கொண்டு இருக்கிறது" என்று ஆவேசமாக பேசினார். தி.மு.க வெகுநாட்களுக்கு தப்பிக்க முடியாது என்றும், மக்களை ஏமாற்றிய தி.மு.கவை மக்கள் ஏமாற்ற காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுத்தது போல, பொன்முடி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை ஒவ்வொரு மேடையிலும் கேட்பதாகவும், மக்கள் ஸ்டாலினை பார்த்து கேட்க வேண்டும் என்றும் கூறினார்.
"நாங்கள் நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறோம்" என்று விந்தியா கூறினார். சசிகலாவும், ஓ.பி.எஸ்-ம் இல்லாத பலமான எதிர்கட்சியாக அ.தி.மு.க இருப்பதாக அவர் தெரிவித்தார். "இது தான் அ.தி.மு.க, இதுதான் இரட்டை இலை, இது தான் இயக்கம் என்பதை நாங்கள் அனைவருக்கும் நிரூபித்து விட்டோம்" என்று அவர் சூளுரைத்தார். பொறுப்புக்கு வந்த பிறகு தன்னுடைய செயல் பேச்சாக இருக்காது, செயலாகத்தான் இருக்கும் என்றும் அவர் கூறினார்
நடிகர் விஜய் அரசியல் தலைவராக இன்னும் வரவில்லை என்று விந்தியா கூறினார். அவர் அரசியல் களத்திற்கு வந்த பிறகு பேசலாம் என்றும், விஜய் எதை வேண்டுமானாலும் டார்கெட் செய்யலாம் ஆனால் இது சினிமா கிடையாது என்றும் குறிப்பிட்டார். "இது அரசியல். மக்களின் களத்தில் நின்று அரசியல் செய்வது மிகவும் கடினம், உண்மையாக நேர்மையாக இருக்க வேண்டும். நேர்மை, உண்மை, பொறுமை என்பது விஜய்க்கு இருக்கிறதா ? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்" என்று விந்தியா தெரிவித்தார்.