மருத்துவர்கள் அசத்தல்..! அரசு மருத்துவர்களால் காப்பாற்றப்பட்ட உயிர்..!

ஈரோடு பகுதியை சேர்ந்த, 48 வயதான ஆண் தொழிலாளி கன்னியப்பன், சேப்டி பின்னை நேற்று மாலை வாயில் வைத்திருந்தபோது, எதிர்பாராமல் விழுங்கி விட்டார். தொண்டையில் சிக்கியதால் வலி தாங்க இயலாமல் துடித்தார். Pin தொண்டைக்குள் சிக்கி ரத்தம் வெளியேற தொடங்கியுள்ளது. எண்டோஸ்கோபி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். கன்னியப்பன் தற்போது மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்
உடனே ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், காது, மூக்கு, தொண்டை நிபுணர் ஸ்ரீதர் தலைமையிலான குழுவினர், 30 நிமிடங்கள் போராடி எண்டோஸ்கோபி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். கன்னியப்பன் தற்போது மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த சிகிச்சை நேரத்தில் கிடைக்காதிருந்தால் அந்த தொழிலாளியின் உயிர் ஆபத்துக்குள்ளாகியிருக்கும் என்றே மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.