இராணுவத்தில் சேர விருப்பமா???

இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்று விரும்புவோர் அதற்கு தயாராகலாம். அடுத்த மாதத்தில் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கலந்த கொண்டு தேர்வில் வென்று உடல் தகுதி தேர்விலும் வென்றால் உடனே பணியில் சேர முடியும். ராணுவத்தில் சேர வேண்டும் என்று சிறு வயது முதலே கனவுகளுடன் வாழ்பவர்களுக்கு வாய்ப்பு அமைந்துள்ளது.
ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் ஜூன் 20 முதல் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் கண்டோன்மென்ட்டில் உள்ள முதல் ஈஎம் மையத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்று பாதுகாப்புத் துறையின் சிவில் உறவுகள் அதிகாரிகள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். அக்னிவீர்(ஜிடி), அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளார்க் மற்றும் அக்னிவீர் டிடிஎன் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த முகாம் நடத்தப்படும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 20ஆம் தேதி காலை 5 மணிக்கு கோட்டேஷ்வர்த்வாரில் உள்ள 1வது இஎம்இ மையத்தில், 4வது பயிற்சி பட்டாலியனில் ஆஜராக வேண்டும்.