1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் அட்டை தனியா வேணுமா? ரேஷன் கார்டில் இப்படி செய்யுங்க..!

1

உதாரணத்துக்கு புதிதாக திருமணமாகி, ஒருவர் குடும்பத்தில் கூடுதலாக இணைகிறார் என்றால், அவரது பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டிவரும். அல்லது தனி அட்டையாக கணவன், மனைவி இருவரும் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருவேளை உங்களுக்கு தனி ரேஷன் கார்டு வேண்டும் என்றால், ஏற்கனவே உள்ள வீட்டின் ரேஷன் அட்டையிலிருந்து உங்கள் பெயரை நீக்க வேண்டும். அந்த பெயரை நீக்கினால் மட்டுமே புதிய ரேஷன் அட்டையில் உங்கள் பெயரை சேர்க்க முடியும். இதற்கும் ஆன்லைனிலேயே வசதி உள்ளது.

https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில், பெயர் மாற்றம், திருத்தம், பெயர் இணைப்பு, பெயர் நீக்கம் என அனைத்து வசதிகளையும் பெற முடியும். அந்தவகையில், புதிதாக திருமணமானவர்களும் பெயர்களை நீக்கலாம் / சேர்க்கலாம்.

அதேபோல தனியாக ரேஷன் கார்டு வேண்டுமானால், புதுமண தம்பதியின் ஆதார் அட்டையும், கேஸ் சிலிண்டர் பில்லும் தேவைப்படும். காரணம், இவைகள் தம்பதிகளின் முகவரி சான்றுக்கு ஆதாரமாகவும், ஆவணமாகவும் எடுத்து கொள்ளப்படும். இருப்பிட சான்றிதழ் தேவைப்படும் என்பதால், வீட்டு வாடகை பத்திரமும் தேவைப்படும். இத்தனை ஆவணங்களையும் வைத்து விண்ணப்பித்தால்தான், தனி ரேஷன் கார்டுகளை புதிதாக தம்பதி பெற முடியும்.

ஆன்லைனில் ரேஷன் கார்டில் புதிதாக உறுப்பினரை சேர்க்க விண்ணப்பிப்பது எப்படி..? 

- ரேஷன் கார்டிலிருந்து பெயர் சேர்க்க https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குள் நுழைந்து, "மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்" என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

- " உறுப்பினரை சேர்க்க" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, ரேஷன் கார்டில் தரப்பட்டிருக்கும் செல்போன் நம்பர், கேப்ட்சா குறியீடு போன்றவற்றை உள்ளிட வேண்டும். 

- இப்போது உங்களது செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை டைப் செய்தால், இன்னொரு பக்கம் தோன்றும்.. அதில், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் காணப்படும். 

- அதில், "குடும்ப உறுப்பினர் சேர்க்கை" என்பதை கிளிக் செய்து, உங்களது பெயர், பாலினம், பிறந்த தேதி, உறவு முறை போன்ற விவரங்களை பதிவிட்டு உறுதிப்படுத்துதல் வேண்டும்.

Trending News

Latest News

You May Like