தமிழகம் முழுவதும் அடைக்கப்படும் சலூன் கடைகள்… ஏன் தெரியுமா?

தமிழகம் முழுவதும் வரும் 9ஆம் தேதி சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்படும் என சவரத் தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் குரும்பபட்டியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி வெங்கடாசலம் என்பரின் 12 வயது மகள் கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் கிருபானந்தன் (19) என்பவர் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி கிருபானந்தன் விடுதலை செய்யப்பட்டார். அவர் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறிய நீதிபதி புருஷோத்தமன் அவரை விடுதலை செய்தார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சவரத் தொழிலாளர்கள் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே வரும் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து சலூன் கடைகளும் அடைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
newstm.in