1. Home
  2. தமிழ்நாடு

அமாவாசை நாளில் பூண்டு, வெங்காயம் உணவில் சேர்க்கக்கூடாது ஏன் தெரியுமா?

Q

மாதத்தில் குறிப்பிட்ட 5நாட்களிலாவது வெங்காயம், பூண்டு ஆகியவை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது அவசியம்.

அமாவாசை திதி

அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள். அன்றைய தினம் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்க்காமல் அவர்களுக்குப் பிடித்த உணவை சமைத்துப் படையலிடலாம். அதே போல அவர்களுக்கு பிடித்த விஷயங்களை தானம் செய்ய வேண்டும்.

அமாவாசை நாள் மாலை நேரத்தில் பித்ரு லோகம் அமைந்திருக்கும் தெற்கு திசையில் ஒரு விளக்கேற்றி வைக்க வேண்டும். அப்படி செய்வதால் நம் குடும்பத்திற்கு முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். இப்படி செய்வதன் மூலம் அவர்களின் பாதை பிரகாசமாகிறது என்றும் நம்பப்படுகிறது. அவர்களின் அருள் கிடைக்கும்.

பெளர்ணமி தினம்

பெளர்ணமி நாள் மகாலட்சுமி மற்றும் சந்திரன் ஆகியோருக்கான சிறப்பு வாய்ந்த நாள். இந்த திதியில் வழிபாடு செய்வதால் வாழ்வில் பிரகாசத்தைக் கொண்டு வரலாம்.

இந்த அற்புத ஆளில் நாம் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றைப் பயன்படுத்தாமல் இருந்து கடவுளை பக்தியுடன் தியானிக்க வேண்டும். இந்த நாளில், உங்கள் உணவுப் பொருட்களில் வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

பிரதோஷம்: பிரதோஷ நாள் விரதம் இருந்து சிவபெருமானையும், நந்தி பகவானை வணங்குவதால் சகல சௌபாக்கியங்கள் கிடைக்கும். விரதம் இல்லாதவர்கள் இந்த நாளில் வெங்காய பூண்டைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.

சங்கடஹர சதுர்த்தி : விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி நாளில் நாம் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்க்காத உணவை எடுத்துக் கொள்வதால் உடலில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தசமி மற்றும் ஏகாதசி:

மகா விஷ்ணுவுக்கு உகந்த தசமி மற்றும் ஏகாதசி நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் தீராத நோய்கள் நீங்கி, சகல செல்வங்கள் கிடைக்கும். விரதம் இல்லாவிட்டாலும் தசமி, ஏகாதசி திதியிலாவது வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை உணவில் பயன்படுத்தாமல் இருத்தல் வேண்டும்

Trending News

Latest News

You May Like