1. Home
  2. தமிழ்நாடு

ஏன் தெரியுமா ? சாதாரண ஒரு நகரம் என்று ஒருபோதும் சென்னையை சொல்லிவிட முடியாது..! #Madrasday

1

சாதாரண ஒரு நகரம் என்று சென்னையை ஒருபோதும் சொல்லிவிட முடியாது. 'வரலாற்று சிறப்புமிக்க சென்னை' என்று தான் கூற வேண்டும். இந்தியாவிலே சென்னை பழமையான நகரமாக கருதப்படுகிறது. அதுபோன்று இங்குள்ள ஒவ்வொரு இடத்திற்கும் வரலாற்று ரீதியாக தனிச்சிறப்பு உண்டு. அவற்றில் முக்கிய சில இடங்கள்...

சென்னை சென்ட்ரல்: 

ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா? போட்டோஸ் உள்ளே..#MadrasDay

தமிழகத்தில் இருந்து வடக்கே பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் முக்கிய முனையமாக திகழும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 1873ம் ஆண்டு தான் உருவாகியது. பின்னர் 1959, 1998ல் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. முதல் முதலாக 1856ல் ராயபுரம் முதல் ஆற்காடு வரை ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 17 பிளாட்ஃபார்ம்களுடன் 30 வழித்தடங்களை கொண்டுள்ளது. சென்னை புறநகர் ரயில் சேவை 1931ம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எழும்பூர் ரயில் நிலையம்: 

ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா? போட்டோஸ் உள்ளே..#MadrasDay

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 1905 ஆண்டு தான் தொடங்கப்பட்டது. சென்ட்ரல் ரயில் நிலையம் ஆரம்பித்து தோராயமாக 33 ஆண்டுகளுக்கு பிறகு எழும்பூர் ரயில் நிலையம் உருவாகியுள்ளது. தற்போது இதில் 15 பிளாட்ஃபார்ம்களுடன் 22 வழித்தடங்களை கொண்டுள்ளது. எழும்பூர் வழித்தடத்தில் உள்ள தாம்பரத்தில் இருந்தும் சமீபகாலமாக வெளியூர் செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையின் 3வது ரயில் நிலையம் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது தாம்பரம் ரயில் முனையம்.

மெரினா பீச்: 

ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா? போட்டோஸ் உள்ளே..#MadrasDay

உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரை 13 கி.மீ நீளம் கொண்டது. பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறும் இடமாகவும், குடும்பத்துடன் சென்று குதூகலிக்க, காதலர்கள் உலா வர என பலதரப்பட்ட மக்களுக்கு மெரினா நல்ல பொழுதுபோக்காக இருப்பது அனைவரும் அறிந்ததே. மெரினாவை சுற்றியுள்ள சாலை 1885ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

மெட்ராஸ் ஹைகோர்ட்: 

ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா? போட்டோஸ் உள்ளே..#MadrasDay

இந்தியாவின் மிகப்பழமையான நீதிமன்றம் என்ற புகழைப்பெற்ற மெட்ராஸ் ஹைகோர்ட் உருவாக பிரிட்டிஷ் குயின் ராணி விக்டோரியா 26, ஜூன் 1862ல் அனுமதி அளித்தார். ஆனால் 1892ல் தான் தற்போதுள்ள கட்டிடம் முழுவதுமாக கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. 

ரிப்பன் பில்டிங்: 

ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா? போட்டோஸ் உள்ளே..#MadrasDay

ரிப்பன் பில்டிங் 1909ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1913ம் ஆண்டு வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது.  இதனை லோகநாத முதலியார் என்பவர் ரூ.7,50,000 செலவில் காட்டிக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனை உருவாக்க பிரிட்டிஷின் ரிப்பன் பிரபு முக்கிய காரணமாக இருந்ததால் அவரது நினைவாக 'ரிப்பன் கட்டிடம்' என பெயரிடப்பட்டது. சென்னை மாநகராட்சியின் அனைத்து முக்கிய அலுவல்களும் இங்கு தான் நடைபெறுகின்றன. 

சேப்பாக்கம் மாளிகை: 

ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா? போட்டோஸ் உள்ளே..#MadrasDay

1768ம் ஆண்டு முதல் 1855ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் 'சேப்பாக்கம் பேலஸ்' தான் ஆற்காடு நவாப் தங்கியிருந்த இடமாகும். முன்னதாக  இப்பகுதிகள் ஆற்காடு நவாபின் வசம் இருந்தது. முகமது அலி கான் வாலாஜா என்ற ஆற்காடு மன்னர் தான் 1764ம் ஆண்டு ஜார்ஜ் டவுனில் ஒரு அரண்மனை கட்ட வேண்டும் என்று விரும்பினார். அதன்படியே கட்டி முடித்து வாழ்ந்த அவர் பிற்காலத்தில், பட்ட கடனை அடைக்க முடியாமல் அதை ஆங்கிலேயே அரசுக்கு கொடுத்து விட்டார். 1871ல் பொதுப்பணித்துறை கட்டிடமாக மாற்றப்பட்டது, தற்போதுள்ள எழிலகத்தின் பெரும்பாலான பகுதி தான் நவாப் அரண்மனை. 

நேப்பியர் பாலம்: 

ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா? போட்டோஸ் உள்ளே..#MadrasDay

சென்னை ஜார்ஜ் கோட்டையையும், மெரினா கடற்கரையையும் இணைக்கும் பாலமாக நேப்பியர் பாலம் கட்டப்பட்டுள்ளது. 1869ல் பிரான்சிஸ் நேப்பியர் என்ற மெட்ராஸ் மாகாணத்தின் ஆளுநரால் கட்டப்பட்டது. பின்னர்  1999ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. 149 மீட்டர் நீளத்தில், 6 வளைவுகளுடன் பிரம்மாண்டமாக இந்தப் பாலம் கட்டப்பட்டது. முன்னதாக இது இரும்புப்பாலம் என்றும் அழைக்கப்பட்டது. 

சென்னை பல்கலைக்கழகம்: 

ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா? போட்டோஸ் உள்ளே..#MadrasDay

1857ல் உருவாக்கப்பட்ட மெட்ராஸ் யூனிவர்சிட்டி இந்தியாவின் மிகப்பழைமையான பல்கலைக்கழகமாகும்.  தன்னாட்சிக் கல்லூரிகளை முதல் முறையாக தொடங்கியது சென்னை பல்கலைக்கழகம். முன்னதாக 1840ம் ஆண்டு காலகட்டத்தில் மெட்ராஸ் ப்ரெசிடென்சி கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தான் சென்னை பல்கலைக்கழகம் உருவாகியது குறிப்பிடத்தக்கது. 

சென்னை அரசு மருத்துவமனை: 

ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா? போட்டோஸ் உள்ளே..#MadrasDay

1664ம் ஆண்டு ஜார்ஜ் டவுனில் ஆரம்பிக்கப்பட்டது தான் சென்னை அரசு மருத்துவமனை. 1772ம் ஆண்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்பாக மாற்றப்பட்டது. தற்போது ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. 

ஜார்ஜ் டவுன்/ஜார்ஜ் கோட்டை:

ஆரம்பித்துல சென்னை எப்படி இருந்துச்சு தெரியுமா? போட்டோஸ் உள்ளே..#MadrasDay

1640ம் ஆண்டு காலகட்டத்தில் உருவான சென்னையின் பழமையான நகரம் ஜார்ஜ் டவுன். இங்கு கட்டப்பட்ட ஜார்ஜ் கோட்டை தான் தற்போது தலைமை செயலமாக உருவெடுத்துள்ளது. 

Trending News

Latest News

You May Like